search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்காளம்மன் கோவில்"

    • பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
    • அம்மனின் கழுத்தில் இருந்த தாலிப் பொட்டையும் காணவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே மேல்தனி யாளம்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி ராஜீவ்காந்தி (வயது 36) வழக்கம்போல நேற்றிரவு பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். மேலும், அம்மனின் கழுத்தில் இருந்த தாலிப் பொட்டையும் காணவில்லை. இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் ராஜீவ்காந்தி புகாரளி த்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், மேல்தனியாளம்பட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    • சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு மற்றும் 108 வாகனங்கள் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டகலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வருகிற 28-ந் தேதி அமாவாசை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக வசதிகள் செய்திடவும், குடிநீர் வசதிகள் தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலைங்களில் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.

    மேலும் காவல்துறையின் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு மற்றும் 108 வாகனங்கள் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.உணவு கட்டுப்பாட்டுத்துறையின் மூலம் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள பொருட்களின் காலாவதிப் பொருட்களை கண்டறிந்து அகற்ற வேண்டும். தீயணைப்புத்துறையின் மூலம், கோவில் வளாகத்தில் தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் அமித், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவிலுடன் இணைந்த அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
    கோவை பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவிலுடன் இணைந்த அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா வருகிற 2-ந் தேதி இரவு 7 மணிக்கு துவஜா ரோகணம் கொடிகட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து 3-ந் தேதி மாலை 3 மணிக்கு முகப்பள்ளயம் மகேஸ்வர பூஜை, சிறப்பு அபிஷேகம், 4-ந் தேதி மதியம் 1 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு மகாசிவராத்திரி, திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல், 5-ந் தேதி காலை 8 மணிக்கு சக்தி விந்தை அலகு தரிசனம், 10.30 மணிக்கு குண்டம் தோண்டுதல் பூஜை, மதியம் அன்னதானம், இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, நள்ளிரவு 1.30 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வருகிற 6-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் பக்தர்கள் பலர் குண்டம் இறங்குகின்றனர். பின்னர் 11.55 மணியளவில் கொடி இறக்குதல், அக்னி அபிஷேகம், மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு, பேச்சியம்மன், வீரபத்திரருக்கு அபிஷேகம், பாவை சுற்றுதல் ஆகியவை நடக்கின்றன. 10-ந் தேதி இரவு மறுபூஜை, குண்டம் அபிஷேகம், அங்காளம்மனுக்கு அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
    ×